ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Archive for April, 2010

Clash of the Titans (2010) – விமர்சனம்

கடந்த மாதம் லைட்டனிங் தீஃப் என்ற திரைப்படம் பற்றி ஒரு குட்டி விமர்சனம் போட்டிருந்தேன். அந்தக் கதை கிரேக்க கடவுகள் பற்றியது. இன்று Clash of the Titans பார்ப்போம் என்று போய் உட்கார்ந்தால் ஒரே அதிசயம். முன்பு கூறிய திரைப்படத்தில் வந்த பல கிரேக்க கடவுகளும் ஜந்துகளும் இங்கேயும். நாயகனின் பெயர் கூட பேர்சியஸ் என்று இருக்கின்றது. முந்திய படத்தில் பேர்சி ஜக்சன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏற்கனவே கிரேக்க வரலாறு கடவுகள் பற்றி எதுவும் தெரியாது அப்புறம் இந்தப் படத்தில் போய் இருந்தால் ஏதோ ஏதோ எல்லாம் காட்டி வெறுப்பேத்தினார்கள். சாம் வேர்திங்கடன் இந்த படத்தில் ஒரு வேர்த்தும் இல்லாமல் மொக்கையாக நடித்திருக்கின்றார். அவதாரிலும் டேர்மினேட்டரிலும் பார்த்த வேர்த்திங்கடன் மிஸ்ஸிங். அது போதாதென்று இடைவேளை நெருங்கும் போதே சாதுவாக கொட்டாவியும் விடத் தொடங்கிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.

பின்னர் ஒரு நாள் ஒரு மீனவன் மிதந்து வரும் ஒரு பேளையை காண்கின்றான். அதை திறக்கும் போது அங்கே நம் நாயகன் பேர்சியஸ் இருக்கின்றார். தனது இறந்த தாயின் மேல் இருக்கும் பெர்சியசை அந்த மீனவன் காப்பாற்றி தன் மகன் போல பேணிப் பாதுகாக்கின்றான்.

இதே வேளை மனிதர்கள் கடவுள் மேல் கோவம் கொண்டு கடவுளுடன் யுத்தப் பிரகடனம் செய்கின்றனர்.

நரகத்தை ஆண்டுவரும் ஹைடஸ் சியசின் அனுமதி பெற்று மனிதர்களைத் தாக்கத் தொடங்குகின்றார். இதில் உச்ச கட்டமாக கிரக்கன் எனும் விலங்கையும் பாவிக்கின்றான். கிரக்கன் எனும் இந்த விலங்கை வைத்தே டைட்டன்களுடனான யுத்தமும் வெல்லப் பட்டது என்பதும் குறிப்பிட்டாக வேண்டும். அது சரி இந்த கிரக்கனை பைரேட்ஸ் ஒப் த கரிபியனிலும் பார்த்தோம் தானே :)

அப்புறம் விதியின் வசத்தான் மனிதர்களால் நம் நாயகன் தேர்ந்தெடுக்கப் பட்டு ஹடைசை அழிக்கப் புறப்படுகின்றார். முக்கியமான பல தகவல்களை இங்கே நான் சொல்லவில்லை. அனைத்தையும் திரையில் காணுங்கள் அல்லது டிவிடியில் காணுங்கள்.

ஏற்கனவே திரைப்படத்தில் சரக்கு கம்மி இதில் நானும் உளறிவிட்டால் :)

நிச்சயமாக அதி மொக்கைப் படம் இல்லை. ஆனால் எதிர்பார்ரதளவிற்கு இல்லை. இதைவிட 1981ல் வெளியான திரைப்படம் சிறப்பாக இருக்கின்றது என்று பழைய சினிமா இரசிகர்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

காட்சியமைப்புகள், சத்தவமைப்புகள் சிறப்பாக உள்ளன. அவையே திரைப்படத்தின் நம்பிக்கைக் தூண்களாக இருக்கின்றன. இந்த விடுமுறை காலத்தில் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெரிய மெகா ஹிட் திரைப்படம் ஆகப் போவதில்லை.

My Rating: 50/100

IMDB Rating: 61/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (5)

The Road (2009) விமர்சனம்

உலகம் அழிவில் வீழ்வதாகவும், அதில் மானிட இனமே அழிந்துபோவதாகவும் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அழிவிற்கு இயற்கையின் சீற்றமோ அல்லது சொம்பி போன்ற காரணங்களோ அல்லது நோய் நொடிகளோ அல்லது அணுவாயுத யுத்தமோ அல்லது வேறு ஏதாவது காரணங்களோ இதுவரை ஹொலிவூட் திரைப்படங்களில் காட்டியிருக்கின்றார்கள்.

ஆனால் மிக குறைவான திரைப்படங்களிலேயே உலகின் நாகரீகங்கள் அழிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகின்றன. அவ்வகையில் இந்த த றோட் எனும் திரைப்படமும் உலகின் நாகரீக அழிவின் பின்னர், நாகரீகம் அற்ற ஒரு சமூதாயத்தின் கோரப் பிடியில் இருந்து தப்ப விழையும் ஒரு தந்தை, தனயனின் கதையே ஆகும்.

இது ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நாவலிற்கு புலிட்சர் விருது கூடக் கிடைத்துள்ளது.


கதையின் ஆரம்பத்தில் இருந்து ஒரு தந்தையும் மகனும் ஒருமித்துப் பயனிக்கின்றார்கள். மிகவும் அழுக்கான உடைகளை அணிந்திருப்பதுடன் மிகவும் நலிவடைந்தும் இருக்கின்றார்கள். இவர்கள் யார் இவர்கள் பிரைச்சனை என்ன வென்று நாங்கள் நினைக்கும் போதே அவர்களின் பிந்தைய காலத்தையும் காட்டிவிடுகின்றார்கள்.

உலகின் நாகரீகம் அழியும் தறுவாயில் ஒரு குடும்பத்தினுள் ஒரு புதிய நபர் பிரவேசிக்கின்றார். ஒரு குழந்தை பிறக்கின்றது இந்த தம்பதியினருக்கு. சந்தோஷமாக இருக்கவேண்டிய இந்த நிகழ்வு இவர்களை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்குகின்றது. தாமே இந்த நிலையில் எவ்வாறு வாழ்க்கையை நடத்தப் போகின்றோம் என்று நினைக்கும் வேளையில் எவ்வாறு இந்த மகனை பொறுப்பாக வளர்த்தெடுப்பது என பெற்றோர் கலங்குகின்றனர்.

நிலமை மோசமடையத் தொடங்கவே, நம்பிக்கை இழக்கும் தாயார் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றார். சற்றும் மனம் தளராத தந்தையோ இறுதிவரை போராடப்போவதாக் கூறுகின்றார். பின்பு இனிமேலும் தன்னால் இப்படியான வாழ்க்கையை வாழ முடியாது என்று எண்ணி தாயார் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றார். இப்போது தந்தையும் மகனும் மட்டுமே குடும்பத்தில் மிச்சம்.

தனயனும் தந்தையும் பயனத்தின் போது

அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் இன்னமும் நாகரீகம் அழிந்துவிடாமல் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் தந்தையும் தனயனும் தமது பயனத்தை ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் பயனத்தில் சந்திக்கும் இடையூறுகள பற்றியதே மீதிக் கதை. இதில் திகிலூட்டும் விடயம் என்னவெனில் மனிதர்களை உண்ணும் மனிதர்கள்.

நாகரீகம் அழிந்து அதனுடன் உணவு உறைவிடம் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்படுவதனால் ஒரு கூட்டம் மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாட புசித்து வருகின்றது. விடியலைத் தேடும் தந்தையும் தனயனும் இவர்களிடம் மாட்டுப்பட்டார்களா இல்லையா என்று பார்க்கும் நேரங்களில் நெஞ்சம் திக் திக் என்கின்றது.

தந்தை மகன் பாசப்பிணைப்பையும் உலகம் மாறினால் என்ன ஆகும் என்பதையும் அழகாகப் படம் ஆக்கியுள்ளார்கள். நேரம் கிடைத்தால் கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

My Rating: 80/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (5)

Awake (2007) விமர்சனம்

ஒவ்வொருநாளும் கோடிக் கணக்கானோருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதில் சுமார் சில ஆயிரக் கணக்கானோருக்கு இந்த மக்க ஊசிகள் சரியாக வேலைசெய்வதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா??

இதில் சிக்கல் என்னவென்றால், இவர்களால் சத்தம் போட்டு பேசக்கூடியதாகவோ அல்லது சைகைகள் காட்டக் கூடியதாகவோ இருக்காவிட்டாலும், இவர்களால் தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் காணமுடியும் அத்துடன் சிகிச்சை வலியையும் உணரமுடியும். உங்கள் நெஞ்சில் அறுவைச் சிகிச்சை பிளேடை வைத்து நெஞ்சைப் பிளந்து இதயம் வரை பார்க்கும் வலியை உணர்ந்து அதை வாயால் கத்த முடியாத நிலைக்கு போனால் என்னாகும்?? அந்த நிலையில் உள்ள ஒருவரது கதையே இந்த திரைப்படம்.


பணம், அழகான காதலி, அன்பான அன்னையார் அனைத்தும் இருந்தும் நாயகன் கிளைட்டனுக்கு விதி சரியில்லை. இதயத்தில் கோளாறு உடைய இந்தச் செல்வந்தன் ஒரு இதய மாற்று சிகிச்சைக்கு கட்டாயம் உள்ளாக வேண்டிய நிலமை. நல்ல வேளையாக இவரின் தோழனாக ஒரு இதய மாற்று சிகிச்சை நிபுணர் அறிமுகம் ஆகின்றார்.

நட்பின் அடையாளமாக நண்பன் மேல் கடும் நம்பிக்கை வைக்கும் கிளைட்டன், நண்பரின் தயவிலேயே தனது இதய மாற்று சிகிச்சையை நடத்த முடிவெடுக்கின்றார்.

க்ளைட்டனின் தாயார் அமெரிக்காவின் சிறந்த ஒரு வைத்திய நிபுனர் மூலமே இந்த இதய அறுவை சிகிச்சையை நடத்த விளைகின்றார். ஆனாலும் நண்பன் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையால் வைத்தியர் ஜாக்கிடமே தான் இதய மாற்று சிகிச்சை செய்ய விரும்புவதாக தனது கோடீஸ்வர தாயாரிடம் அறுதியாகக் கூறிவிடுகின்றான் இந்தத் தனயன்.

ஒரு நாள் மாற்று இதயச் சிகிச்சைக்கு ஏற்ற ஒரு இதயம் கிடைக்கின்றது. சந்தோஷமாக நண்பன் ஜாக்கின் உதவியுடன் அன்னையாரின் எதிர்ப்பையும் புறக்கணித்து சத்திர சிகிச்சை நடக்கின்றது.

இங்கே தான் கிளைட்டனுக்கு Anesthesia awareness, ஏற்படுகின்றது. இதன் பின்னரே கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. இதய மாற்று சிகிச்சை நடைபெறும் போது நடக்கும் சம்பாஷணை அனைத்தையும் கேட்கும் நிலமைக்கு கிளைட்டன் தள்ளப்படுகின்றான்.

இவ்வடமே கதையின் திருப்பு முனை. இதன் பிறகு கதையில் என்ன நடக்கின்றது என்பதைச் சொல்வதும் அழகல்ல.

திரைப்படம் பார்த்து முடித்த பின்னர் அருமையான ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி மனதில் கிடைத்தது. டாக்டரைக் காட்டி ஆரம்பிக்கும் திரைப்படம் டாக்டரை காட்டியே முடிகின்றது. வைத்திய முறைகளை தப்பாக இந்த திரைப்படத்தில் காட்டினார்கள் என்று குறைகள் முன்வைக்கப் பட்டாலும் அமெரிக்காவில் திரைப்படம் சூப்பர் ஹிட்டாம்.

அழகான காதல் கதை யூ டேர்ண் போட்டு அதகளப் படும் இடைவேளையின் பிறகு. பார்த்து இரசிக்கக்கூடிய திரைப்படம் ஒன்று.

My Rating: 75/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (2)

டெக்ஸ் வில்லர் தோண்றும் The Lonesome Rider

புத்தக அட்டை

காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள் என்றால் நிச்சயமாக டெக்ஸ் வில்லரைத் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. டெக்ஸ் குதிரையேறி வேட்டையாடும் காட்சியை லயன், முத்து காமிக்ஸில் படித்து திளைத்த காலம் ஒரு பொற்காலம்.

டெக்சின் கதைகள் 1948ல் முதன் முதலாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. இதே ஆண்டில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. அதைவிட எனது தாயாரும் தந்தையாரும் பிறந்ததும் இதே ஆண்டுதான். என் வாழ்வில் முக்கியமான ஆண்டாக இருக்கும் 1948ல் டெக்ஸ் பிறந்தமை மேலும் பெருமையே எனக்கு. ;)

காலம் பல கடந்தாலும் டெக்ஸ்சின் காமிக்சுகள் என்றும் இளமையானவையே. இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த கௌபாய் நாயகனின் கதையொன்றை லக்கி லிமட் ஆதரவில் இணையத்தின் வழி படிக்க முடிந்தமை பெரும் மகிழ்ச்சியான விடையம். Tex – The Lonesome Rider என்கிற இந்தக் கதை நான் கடைசியாகப் படிந்த டெக்சின் கதையாகும்.

வழமையான டெக்சின் சித்திரங்களில் இருந்து மாறி வித்தியாசமான சித்திரப் பாணியில் இந்தக் கதை அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இதற்கு முக்கியமான காரணம் இந்த காமிக்சின் ஓவியர் ஜோ குபேர்ட். காலப் பகுதியில் எழுதப்பட்ட & வரையப்பட்ட இந்தக் கதை முந்தய டெக்ஸ்வில்லர் ஓவியங்களில் இருந்து வேறுபட்டிருக்கின்றமை வெள்ளிடைமலை. அதைவிட இந்த லோன்சம் ரைடர் கதையில் டெக்சின் வழமையான தோழனான கிட் கார்சன் மற்றும் டைகர் ஜக் போன்றவர்களைக் காண முடியாது. இதனால் இந்தக் கதையில் டெக்ஸ் தனியாளாக சுப்பர் ஸ்டார் போல சண்டை போடுகின்றார்.

எனக்கென்ன்னவோ கதையை வாசிக்கும் போது டெக்சின் ஓவியங்களில் டிசி காமிக்சின் பனிஷர் ஓவியப் பாணியின் தாக்கத்தைப் பார்க்க கூடியதாகவிருந்தது. சில வேளை ஓவியர் தன் பாணியில் வரைய அப்படிச் செய்திருக்கலாம்.

யோ குபேர்ட் - ஓவியர்

சரி கதையில் என்ன நடக்கிறது என்று மேலோட்டமாக சொல்கின்றேன். தனது நண்பர் குடும்பத்தைப் பார்க்க நீண்ட காலத்தின் பின்னர் செல்லும் டெக்சிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கின்றது.

ஊர் மேய்ந்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் டெக்சின் குடும்ப நண்பர்களின் குடும்பத்தை வேட்டையாடிவிடுகின்றது.

இந்த படுகொலைகளுக்குப் பழி வாங்குவதாக இவர்களின் கல்லறையில் சத்தியம் புரிந்து புறப்படுகின்றார் அகில உலக காமிக்ஸ் சுப்பர் ஸ்டார் டெக்ஸ்.

அப்புறம் என்ன மீதிக் கதையைச் சொல்வது அழகல்லவே. டெக்ஸ் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்த்து நரிகளை வேட்டையாடுவதுதான் கதை.

இவ்வளவு சிறப்பான இந்த டெக்ஸ் கூட அமெரிக்காவில் பிரபலமாகாமை ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சில வேளை சூப்பர் மேனும், பட் மேனும்தான் அவர்கள் உலகம் போல.

நீங்கள் டெக்ஸ் இரசிகரா?? அப்படியானால் கட்டாயம் இந்தக் கதையைப் படித்துவிடுங்கள்.

அமேசனில் வாங்க


New
தமிழில் இந்தக் கதையை லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் “சாத்தான் வேட்டை” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

தகவல் உதவி: Siv, King Viswa, Mathu

பட உதவி: கிங் விஷ்வா

முன் அட்டை

பின் அட்டை


காமிக்ஸ் பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் அதற்கு ஒரு தனி வலைப்பதிவு திறக்க நினைத்தாலும் அளவிற்கு மிஞ்சி எதற்கு ஆயிரம் வலைப்பதிவு திறக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தால் இந்த ஹொலிவூட் பார்வை வலைத்தளத்திலேயே காமிக்ஸ் பதிவுகளையும் இடுவதாக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு செய்வது பிடிக்காதுவிட்டார் அறியத் தாருங்கள் நிச்சயமாக புது வலைப்பதிவு ஆரம்பித்துவிடலாம்.

posted by மயூரேசன் in காமிக்ஸ் and have Comments (17)