Wednesday, January 20, 2010

Zombieland (2009)

Your Ad Here

இந்த சொம்பி (Zombie) என்ற எண்ணக்கருவை வைத்துப் பல திகல் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் Rsident Evil, The Legend போன்ற திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் வரும் அதே சொம்பிகள்தான் இந்த திரைப்படத்திலும் ஆனால் ஒரு வித்தாயாசம், நான் அறித்தவரை இதுதான் சொம்பிகளை வைத்து எடுத்த முதலாவது காமடித் திரைப்படம். காமடித் திரைப்படமா, இல்லை திகில் திரைப்படமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே திரைப்படம் கல கலவென்று முடிந்துவிடுகின்றது.




வழமைபோல ஹொலிவூட் பாலா சொல்கின்ற கனடாவில் தொடங்கி மெக்சிக்கோவில் முடிகின்ற உலகத்தில் இருக்கும் மானிடர்கள் பலரும் சொம்பி தாக்குதலில் தாங்களும் சொம்பி ஆகிவிட எஞ்சியிருக்கும் சில மானிடர்களின் சிரிப்புச் சாகசமே இந்தத் திரைப்படம்.

Columbus என்று ஒரு பொடியன் அவனுக்கு எதைக் கண்டாலும் பயம். அதிலும் கோமாளியைக் கண்டால் இன்னும் பயம். ஆமாம், தேனாலி கமல் மாதிரி. அதனால் சொம்பித் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனக்கு தானே பல விதிகளை வகுத்துக்கொள்கின்றான். உதாரணமாக காரில் ஏறும் போது பின் ஆசனத்தில் சொம்பி இருக்கின்றதா என்று பார்த்தல், இரண்டுக்குப் போகும் போது கையில் துப்பாக்கியுடன் இருத்தல், முதல் தடவை சொம்பியை சுட்டாலும் இரண்டாம் தடவையும் மண்டையை குறிபார்த்துச் சுடதல் போன்றவையடக்கம். அதைவிட எப்போதும் ஹீரோவாக ரை பண்ணாதே என்கிறதும் ஒரு முக்கியமான விதிமுறை.

இந்த கொலம்பஸ் தன் தாய் தந்தையர் இருக்கும் அமெரிக்காவின் கிழக்குத் திசை நோக்கிப் பயனிக்கின்றான், அவனுடன் இணையும் எதற்கும் அஞ்சா ஒரு மனிதன் மற்றும் திருட்டு தண்டா செய்யும் 2 பெண்கள்.

அப்புறம் அந்த திருட்டுத் தண்டா செய்யும் ஒரு பெண்ணுடன் நம்மவர் காதலில் விழுவார் என்பதையும் நான் சொல்லியா உங்குளுக்குத் தெரியவேண்டும்.

இவர்கள் எவ்வாறு ஒருத்தருக்கு ஒருவர் அறிமுகம் ஆகின்றார்கள், இவர்களின் பயனம் போன்றவற்றை மையப்படுத்தி கதை மிகுதி நகர்கின்றது.

IMDB: 79/100
Mayu: 50/100

லேபிள்கள்: ,

Monday, January 18, 2010

அவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியது

Your Ad Here

அவதார் காய்ச்சல் உலகம் எங்கும் குறைந்தபாடே இல்லை. தொடர்ந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏன் வேட்டைக்காரன் கூட ஓடுகின்றது தானே? என்று நீங்கள் கேட்கலாம்..ஆனால் வெறும் தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் மக்கள் நிறைந்த தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா??

கோல்டன் குளோப் விருதைத் தொட்டால் அனேகம் ஆஸ்கார் விருதுகளையும் எட்டிவிடலாம் என்பது பல காலமாக நடந்துவரும் விடையம்தான். தற்போது கோல்டன் குளோப் விருதை அவதார் தட்டிச்சென்றுவிட்டது.

இன்று நடந்த நிகழ்வில் அதைவிட இயக்குனர் ஜேம்ஸ் கமரோனுக்கு சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.

Avatar asks us to see that everything is connected, all human beings to each other, and us to the Earth. And if you have to go four and a half light years to another, made-up planet to appreciate this miracle of the world that we have right here, well, you know what, that's the wonder of cinema right there, that's the magic,'
என்று கூறி தனது விருதினை ஏற்றுக்கொண்டார்.

ஆஸ்கார் வெற்றிக் கனிகளை அவதார் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கமரோனின் டைட்டானிக் திரைப்படம் 1998ல் 11 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்றதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

வசூலிலும் விரைவில் டைட்டானிக்கின் வசூலை எட்டிப்பிடித்துவிடுவதாக அவதார் மிரட்டிக்கொண்டுள்ளது. ஐந்து வாரங்களாக தொடர்ந்து அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அவதார் திரைப்படம் முன்நிலையில் உள்ளது.

லேபிள்கள்: , ,

Sunday, January 10, 2010

அவதார் பாகம் II விரைவில்

Your Ad Here

உலகம் எங்கும் சக்கைபோடும் அவதார் திரைப்படம் பற்றி நமது வலையுலக நண்பர்கள் பதிவிட்டு பிய்த்து மேய்ந்துவிட்டதால் அந்த முயற்சியில் இறங்க அடியேன் முயற்சிக்கவில்லை. ஆயினும் இன்றுதான் அடியேனுக்கு அவதார் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் 23ம் திகதியே கொழும்பில் அவதார் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டாலும் சன நெருக்கடி காரணமாக இன்றுதான் சென்று பார்க்க கிடைத்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காய்க்கும் வெயிலில் நின்றுதான் திரைப்படம் பார்க்கவேண்டியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகளும் காய்ச்சும் வெயிலிலும் காத்து நின்று திரைப்படம் பார்த்தது வியப்பாக இருந்தது. திடீர் என்று எங்கோ இருந்து முளைத்த சிறிய பொண்ணு ஒன்று "So you all wanna see some freaky aliens..huh?" என்று நீண்டு நெளிந்து வளைந்து சென்ற வரிசையைப் பார்த்து சொல்லிக்கொண்டு சென்றது.

அட சரி அதை விடுங்க மாட்டருக்கு வாங்க. அவதார் படம் வெளியிடப்படும் போது அவதார் 3 பாகங்களை எடுக்குமளவிற்கு தன்னிடம் கதையிருப்பதாக ஜேம்ஸ் கமரோன் தெரிவித்திருந்தார் ஆயினும் அப்போது அந்த திரைப்படம் எப்படி ஓடப்போகின்றது என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. இன்றய தேதியில் அவதார் திரைப்படம் வசூலை அநியாயத்திற்கு அள்ளிவாரிவிட்டது (சுமார் $1,131,752464).

இந்த வேளையில் ஜேம்ஸ் கமரோன் "Yes, there'll be another." என்று நான்கு வார்த்தையில் பல இரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துவிட்டார்.

அடுத்த பாகத்தில் கதை என்னவாக இருக்கும் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளும் வலைத்தளங்களும் யோசிக்கத் தொடங்கியுள்ளன. இதில் சிலர் அடுத்த பாகம் பன்டோராவைவிட்டு அதன் வெளியே நடக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக பண்டோராவின் சந்திரன்களின் நடைபெறலாம் என்று கூறுகின்றனர்.

சிலர் கருத்து தெரிவிக்கையில், முதலாம் பாகத்தில் மரத்தில் வாழும் நாவி இனத்தவரைத்தான் இந்த திரைப்படத்தில் காட்டுகின்றார்கள். ஆனாலும் இறுதி யுத்தத்தில் பல உள்ளூர் நாவி இனத்தவர்கள் ஒன்றினைகின்றனர். உதாரணமாக குதிரை வீரர்கள், பறவைகளில் பறந்து வரும் இனம் என்று பல இருக்கின்றனர். இவர்களின் உள்ளூர் அரசியல் என்ன போன்றவை பற்றி பாகம் ஒன்றில் குறிப்பிடப்படவில்லை ஆகவே இது பற்றி இரண்டாம் பாகத்தில் மேலும் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதைவிட தோற்று ஓடிய மனித குலமும் RDA வும் மீள பண்டோராவிற்கு வரலாம். அவர்கள் நாவி இனம் மீது தொடுத்த போரின் நோக்கமே அங்கிருக்கும் சில கணிமங்களைத் திருடவே. அதைப் பெற படை பெருக்கிக்கொண்டு மீள மனிதர்கள் வந்து நாவிகளைத் தாக்கலாம்.

எது எப்படியோ இனி ஜேம்ஸ் கமரோன் விட்ட வழியேதான். அவர் என்ன செய்து காட்டப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.

I loved the first film and I hope the sequel will be just as good.

லேபிள்கள்: , ,

Saturday, September 26, 2009

The Other Man (2008) விமர்சனம்

Your Ad Here

மணமான நபர்களின் கள்ளக்காதல் வெளித் தொடர்புகளை வைத்து பல திரைப்படங்கள் இது வரை ஆங்கில சினிமாவில் வெளிவந்துள்ளது. Unfaithful போன்ற திரைப்படங்கள் இவற்றில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்கள். The Other Man திரைப்படக் கதையும் இது சம்பந்தப் பட்டதே. மனைவியின் கடந்த காலம் பற்றி அறிய கிடைக்கும் கணவன் மணம் உடைந்து அந்த பழைய கள்ளக் காதலனைத் தேடுவதே கதை.



ஒரு நாள் தன் மனைவியின் செல்பேசிக்கு வரும் Voice Mail இல் ஆரம்பித்து email, password protected folder வரை சென்று மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்து கொள்கின்றான் கணவன். பின்னர் அந்த நபர் யார் என்று அறியும் நோக்கில் மனைவி போல மின்னஞ்சலுக்கு பதில் போட்டு அவன் இருக்கும் இடம் சென்று அந்த நபரை சந்திக்கின்றார் கணவர்.

திரைப்படம் முடியும் போது வழமைபோல ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றார்கள். அதை கேட்டதும் அட பாவமே என்று மனம் குழைகின்றது.



Liam Neeson இந்த திரைப்படத்தில் கணவன் பாத்திரத்தில் நடிக்கின்றார். முன்னாள் கள்ளக் காதலன் பாத்திரத்தில் Antonio Banderas நடிக்கின்றார். Liam Neeson நல்ல ஒரு நடிகர்தான் இவரை நீங்கள் Taken, Batman Begins போன்ற திரைப்படங்களில் பாத்திருக்கலாம்.

Antonio Banderas நீங்கள் பார்த்து இரசித்த ஷிரேக் திரைப்படத்தில் வரும் Puss in the boot பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். Puss in the boot என்றே ஒரு திரைப்படம் எதிர்காலத்தில் வர உள்ளது. அதற்கும் இவரே குரல் கொடுக்கவுள்ளார்.


வழைமையான பழைய மொந்தையில் புதிய கள். கண்டிப்பாக இது வயது வந்தோரிற்கான திரைப்படம்.

RATING 65/100

லேபிள்கள்: ,

Friday, September 25, 2009

Corpse Bride (2005) விமர்சனம்

Your Ad Here


திருமணத்திற்கு நிச்சயம் செய்தாகிவிட்டது. ஆனால் இப்போது தேவாலயத்தில் அருட் தந்தை முன்னால் ஒத்திகை பார்க்கவேண்டும். அங்கேதான் நம்ம ஹீரோ வீக்!. ஒத்திகையில் தாறுமாறாக சொதப்பும் இந்த ஹீரோ வெட்டவெளியில் பனி மூட்டத்தில் மூடுபனியில் ஒரு மரக்கொப்பில் மோதிரத்தைப் போட்டு தன் திருமண ஒத்திகையை நடத்துகின்றார். இங்கேதான் காரியம் கெட்டு குட்டிச்சுவரானது. மரக்கொப்பென்று நினைத்து அவர் மோதிரத்தைப் போட்டது ஒரு இறந்த பெண்ணின் எலும்புக்கூட்டு விரலுக்கு. ப்பூ...! இப்ப செத்த சவம் எழும்பி வந்துட்டுதுங்கோ!



Johnny Depp கதையின் நாயகனுக்கு குரல் கொடுத்திருந்த காரணத்தால் இந்த திரைப்படத்தை நான் பார்த்தேன். ஆனாலும் இந்த அனிமேசன் திரைப்படம் என்னை ஏமாற்றவில்லை. அருமையான கதையமைப்பு, வசனங்கள், காட்சியமைப்புகள் என்று அற்புதமான திரைக்காவியம்.

முன்பு ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இறந்துபோன ஒரு மணப்பெண் தற்செயலாக நம் ஹீரோவிற்கு மனைவியாகிவிட நம் ஹீரோவை இழுத்துக்கொண்டு இந்த பேய்ப் பெண் தம் பேய் உலகத்திற்கு சென்றுவிடுகின்றாள். அங்கே நம் மனித நாயகனுடன் புதிய வாழ்க்கை ஒன்றை ஆரம்பிக்க நினைக்கின்றாள்.

இதேவேளை தன் அருமை காதலியைப் பிரிந்து வாடும் காதலன் மீள அவளுடன் சேர முயற்சிக்கின்றான். இவர்கள் சேர்ந்தார்களா இல்லை நம் ஹீரோ ஜீரோவாகி இறுதிவிரை பேய் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினாரா என்பதை DVD இல் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


திரைப்படத்தில் மற்றுமொரு சிறப்பான அம்சம் இசை. ஓபேரா ரக இசையை இரசிப்பவர்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்துடன் காதல் கொள்வர். அதைவிட நாயகியின் உணர்வுகள் அவர் பியானோ வாசிப்பதன் மூலம் காட்டுவார்கள். ஆஹா.. அருமை. வேட்டைக் காரன்கள் எல்லாரும் எப்ப இப்படி சிந்திப்பார்களோ???



இது ஒரு நாடோடிக் கதையை மையமாக கொண்டு எழுதிய திரைப்படமாம். நீங்களும் அந்த நாடோடிக் கதையை வாசித்துப் பார்க்கலாம்.



அருமையான அனிமேசன் திரைப்படம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த திரைப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். குடும்பத்துடன் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம்.

RATING : 85/100

புல்லட்டின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப் பதிவில் இருந்து ரேட்டிங் முறமையும் அறிமுகப் படுத்தப்படுகின்றது.

லேபிள்கள்: , ,

Monday, September 21, 2009

Knowing (2009) விமர்சனம்

Your Ad Here
கலிகாலம் முற்றி கிருஷ்ணன் குதிரையில் வந்து உலகை அழித்து செல்வார் என்று இந்து சமயமும். நோவா பேளை பற்றி பைபிளும் சொன்ன கதையை தற்காலத்தில் நடப்பது போல ஹொலிவூட் பாணியில் இயக்குனர் Alex Proyas காட்டியுள்ளார். ஆரம்பத்தில் மெல்ல மெல்ல ஆரம்பித்து சூடுபிடித்து கதிரை நுனியில் உட்காரும் போது டபுக்கென்று திரைப்படம் முடிந்துபோய் விடுகின்றது.



அன்று
1959ல் ஒரு பாடசாலையில் 50 வருடத்தின் பின்னர் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து வரையுமாறு கூறுகின்றார் ஒரு ஆசிரியர். இந்த படங்களை ஒரு சின்ன இரும்பு டப்பாவில் இட்டுப் பூட்டி 50 ஆண்டுகளின் பின்னர் 2009ல் திறப்பதாக திட்டம். எல்லாச் சிறுவர்களும் பல்வகையான சித்திரங்களை வரையும் போது ஒரு சிறுமி மட்டும் அடுக்கடுக்காக சில இலக்கங்களை எழுதுகின்றார். பட படப்பாக எந்நேரமும் காணப்படும் அவர் காதுக்குள் எந்நேரமும் ஏதோ இரைச்சலாகவும் பேசுவதும் போல சத்தம்.

இன்று
MIT இல் பேராசிரியராக இருக்கும் John Koestler (Nicolas Cage) இன் மகன் அதே பாடசாலையில் கல்வி கற்கின்றார். 50 ஆண்டுகளின் பின்னர் அந்த சின்ன இரும்பு டப்பா உடைக்கப்பட்டு அதனுள் இருக்கும் சித்திரங்கள் உறைகளில் இட்டு அங்கு படிக்கும் மாணவர்களிடன் பள்ளி நிர்வாகம் வழங்குகின்றது.

இந்த சின்னப்பையன் கையில் வந்து கிடைப்பதோ அந்த இலக்கங்கள் கொண்ட கடதாசி.

இதன் பின்னர் விடாது சனி என்று விதி இவர்களை துரத்தோ துரத்து என்று துரத்துகின்றது. இந்த இலக்கங்களின் பின்னால் இருக்கும் மர்மத்தை பேராசிரியர் யோன் மெல்ல மெல்ல கழற்றுகின்றார். இதனால் நிலமை மேலும் சிக்கலாகின்றது.

மொத்த மனித இனமுமே அழிவின் விளிம்பிற்கு வருகைதருகின்றது. இதில் இருந்து மானிடம் மீண்டதா வீழ்ததா என்பது மிகுதிக் கதை.



மெல்ல ஆரம்பிக்கும் படம் மெதுவாக சூடேறி அப்படியே பட பட என்று கதிரை நுனிக்கு அழைத்துவருகின்றது. முடிவு ஏதோ சொதப்பல் போல இருந்தாலும் இதைவிட நல்ல ஒரு முடிவு இந்த திரைப்படத்திற்கு கொடுப்பதும் கடினம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Nicolas Cage இனதும் அவரது மகனாக நடிக்கும் சிறுவனினதும் நடிப்பு அபாரம். இயக்குனர் பற்றிச் சொல்லத் தேவையில்லை தானே. iRobot எனும் திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து எடுத்து உலகத்தை உச் கொட்ட வைத்தவர்.

திரைப்படத்தில் பிரமாண்டம் விண்ணளவு உள்ளது. குறிப்பாக விமானம் விபத்துக்ககுள்ளாகும் காட்சி, இரயில் விபத்துக்குள்ளாகும் காட்சி என்பன.

பார்க்க திரைப்படம் ஒன்று தேடுபவர்கள் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம். குடும்பமாக உட்கார்ந்து நடுங்கி நடுங்கி இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

லேபிள்கள்: ,

Thursday, September 10, 2009

DISTRICT 9 விமர்சனம்

Your Ad Here

வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்து பூமியில் வதியும் கோமாளிகள் மனிதருடன் அடிபிடிப் படுவதாக ஆயிரத்தெட்டு திரைப்படங்களை ஹொலிவூட் காரங்கள் எடுத்திருப்பார்கள். அந்த வரிசையில் ஆயிரத்தொன்பதாவது திரைப்படம் இது. பூமியில் ஒரு கூட்ட வேற்றுக் கிரகவாசிகள் அடைக்கலம் புகுகின்றார்கள். அவர்கள் பல்கிப் பெருகி மனிதர்களுக்குப் பெரும் இடையூறாக விரைவில் மாறிவிடுகின்றார்கள். இந்த வேற்றுக் கிரக வாசிகளை கட்டுப்படுத்த மனிதர்கள் எடுக்கும் முயற்சி பற்றியே இந்தக் கதை விரிகின்றது. வழமையான பூச்சுத்தல்களுக்கும் குறைவில்லை.

தென் ஆபிரிக்காவின் யோகன்னஸ்பேர்க நகரத்தின் மீது ஒருநாள் ஒரு விண்வெளிக் கலம் தரித்து நிற்கின்றது. அந்த கலம் நகராமல் அப்படியே நிற்பதுடன் அதன் கட்டளைப் பகுதி கீழே விழுந்து விட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன (என்ன விஜய் படமாக இருக்கும் எண்டு பயப்பிடுறியளோ?). முதலில் சிறிது குழப்பம் அடையும் மனித குலம் விழுந்தடித்து தனது ஒரு அணியினை ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு அனுப்புகின்றனர்.

பெரிதாக டிஷூம் டிஷூம் ஒன்று எதிர்பார்ப்பவர்கள் இந்த இடத்தில் ஏமாந்து போவர் ஏன் எனில் உள்ளே செல்லும் அணியினர் உணவில்லாம் வாடியிருக்கும் வேற்றுக் கிரகவாசிகள் கும்பலைக் காண்கின்றனர்.

இந்த வேற்றுக் கிரகவாசிகளை தத்தெடுக்கும் அரசு அவர்களை ஒரு முகாமில் தங்கவைக்கின்றது. இந்த முகாமின் பெயர்தான் District 9. விரைவிலேயே இந்த முகாம் ஒரு குப்பம் ஆகிவிடுகின்றது. பீற்றர் ஜக்சன் Slum dog Millionaire திரைப்படம் பார்த்தாரோ தெரியாது இப்படியாக வேற்றுக் கிரகவாசிகள் வாழும் இடம் குப்பம் ஆகிவிட்டதாக கூறுகின்றார்.

வேற்றுக் கிரகவாசிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் ஜோகன்னஸ்பேர்க் நகரத்தில் கூட கூட அதனால் நகர வாசிகள் மிக வெறுப்படைகின்றனர். நகர மக்களின் எதிர்ப்பு கூடவே வேற்றுக் கிரகவாசிகளை நகரில் இருந்து 240 கி.மீ தூரத்தில் உள்ள வேறு ஒரு முகாமிற்கு இடம் மாற்றும் முயற்சிகள் தொடங்குகின்றது. இந்த இடம் மாற்றும் முயற்சியை Multinational United (MNU) எனும் தரியார் இராணுவப் பாதுகாப்பு நிறுவனம் பொறுப்பேற்கின்றது.

இங்கேதான் எங்கள் ஹீரோவான Wikus van de Merwe அறிமுகம் ஆகின்றார். காற்றில் பறந்துவந்தோ அல்லது சப்பாத்தைக் காட்டி டெனிமை காட்டி அப்புறம் முகத்தைக் காட்டியோ ஹீரோ அறிமுகம் நடக்கவில்லை.

இதற்குப் பிறகு என்னாச்சு என்பதை வெள்ளித்திரையிலே டிவிடியிலோ, டொரண்ட் புண்ணியத்திலயோ பார்த்து கொள்ளுங்கள்


திரைப்படத்தில் கணிசமான பகுதி ஒரு கையடக்க கமிராவில் எடுப்பது போலவும் பதிவாகின்றது. இந்த கையடக்க கமிராவில் எடுப்பதாக காட்டும் காட்சிகள் குளோவர்பீல்ட் எனும் திரைப்படத்தை ஞாபகம் ஊட்டுகின்றது.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. தறிகெட்டுத் திரியும் வேற்றுக் கிரகவாசிகள் மத்தியில் புத்திக்கூர்மையுடன் சில வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதாயும் காட்டியுள்ளார்கள். அதைவிட மனிதனில் கெட்ட குணம் பிறகு நல்ல குணம் என்று அந்தப் பக்கத்தாலும் கதை சிறிது நகர்ந்து கொள்கின்றது.

கடுமையான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால் சிறுவர்களுக்கு ஏற்றபடம் என்று நினைக்கவில்லை.

மகா மட்டம் என்று இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்யும் மக்குகளை எதுவும் செய்ய முடியாது. ஆனால் எல்லாரும் இம்மாதிரியான Sci-fi திரைப்படங்களை விரும்பிப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

லேபிள்கள்: ,