ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Mission: Impossible – Ghost Protocol

மிசன் இம்பொசிபிள் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஈதன் ஹன்ட் எனும் துப்பறிவாளனையும் அவனைச் சுற்றி இருப்போரையும் சுற்றிக் கதைகள் நகரும். உலகின் பெரும் நகரங்களில் கதைகளின் களம் அமையும். முதல் மூன்று பாகங்களும் உலக ரீதியில் வர்த்தக ரீதியில் வெற்றியடையவே இப்போது நான்காம் பாகத்தையும் வெளியிட்டுள்ளனர். வழமை போல டொம் குரூஸ் திரைப்படத்தின் நாயகன்.

அமெரிக்க ருசியா உறவு முறை இப்போது ஒரளவு நன்றாக இருந்தாலும் பனிப் போர் காலத்தில் மிக மோசமாக இருந்த்து. குறிப்பாக ருசியா கியூபாவில் ஏவுகணைத் தளங்களை அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மிக மோசமான நிலையை அடைந்தது. ருசிய கப்பல்கள் பசிபிக் கடலைத் தாண்டி வரும் போது தாக்குதல் நடத்துமாறு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக உத்தரவிடுமளவிற்கு நிலமை தலைகீழாய் இருந்தது.

தற்போது MI4 திரைப்படத்தில் மீண்டும் அமெரிக்க உருசிய உறவுகள் மோசமடைகின்றது. இதற்கு முக்கியகாரணமாக கிரெம்பிளின் மாளிகையில் நடக்கும் குண்டுவெடிப்பும் அதற்கு பொறுப்பாக்கப்பட்ட டொம்குரூஸ் மற்றும் அவர் குழுவினருமாகும் (IMF).

துபாய்


அமெரிக்க அரசு IMF ஐ இடை நிறுத்துகின்றது. தற்போது டொம் குரூசும் அவர் குழுவினரும் கிரம்ளின் மாளிகையில் தொலைந்த ஆவணங்களை மீளக் கைப்பற்றி நடக்க இருக்கும் அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலைத் தவிர்க்க முயல்கின்றனர்.

சாதாரணமான கதை ஆனால் சிறப்பான நடிப்பு அருமையான சண்டைக் காட்சிகள் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. குறிப்பாக டுபாயின் உயர்ந்த கட்டிடத்தில் நடக்கும் காட்சிகள், மண் புயலினூடு நடக்கும் கார் துரத்தல் காட்சிகள் எல்லாம் அபாரம். டிவிடியில் இந்த திரைப்படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட்டு, கட்டாயம் திரையரங்கில் பார்த்துவிடுங்கள்.

மண் புயலினூடு வில்லனைத் தேடும் ஈதன் ஹன்ட்

கதை என்னவோ அமெரிக்காவில் ஆரம்பித்தாலும் இறுதியில் முடிவடைவது இந்தியாவின் ஒரு தானியங்கி கார் தரிப்பிடத்தில். மும்பாய் என்று அவர்கள் சொன்னாலும் கட்டடங்கள் எங்கும் சண் டீவி இலச்சினையும் தெலுங்கு எழுத்துக்களுமே தெரிகின்றன. ஹைதராபாத்தில் காட்சிகளைச் சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஜெரமி ரைன்னர் காட்சிகள் எங்கும் நடிப்பில் கலக்குகின்றார். வழமையாக ஹீரோ மட்டும் செய்யும் சாகச காரியங்களை அவரும் செய்கின்றார். அதே வேளை சிமொன் பெக் கல கல திணைக்களத்தை குத்தகைக்கு எடுத்து சிரிக்க வைக்கின்றார். மொக்கை காமடிகள் இல்லாமல் போனமை மனதிற்கு ஆறுதல். போலா பட்டன் அழகுப் பதுமையாக வருகின்றார். சண்டைக் காட்சிகளில் சீற்றம் கொண்ட வேங்கையாக மோதுகின்றார். பிறகு அணில் கபூரை பேச்சில் மயக்கி படுக்கை வரை அழைத்து அங்கே வைத்து மொத்துகின்றார். பாவம் அணில் கபூர் ஒரு மொக்கை இந்தியப் பணக்காரன் வேடத்தில் வந்து சில நிமிடங்கள் சிரிக்கவைத்து விட்டுப் போகின்றார்.

டொம் குரூசின் முகம் எங்கும் வயதான ரேகைகள் வெளிப்படையாவே தெரிகின்றது. எமது அபிமான நடிகர்கள் பலரும் வயதாகிப் போனது என்னவோ கவலைதான் தருகின்றது. ஆனால் அவர்களுக்கு வயதாகி விட்டது என்று கவலை பட உலகமே இருக்கின்றது, அவர்களுடன் சேர்ந்து எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது என்று நினைக்கும் போது பக் என்கிறது இதயம் ;)

புள்ளி 70/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (4)

A Cat in Paris (2010)

கார்டூன் திரைப்படங்களை நாம் பொதுவாக இரசித்துப் பார்ப்பதுண்டு. இன்று வெளியாகும் பல ஹாலிவூட் திரைப்படங்கள் கார்ட்டூன் திரைப்படங்களாக இருப்பதை நாம் காணலாம். குங்பு பண்டா, டின் டின், டோய் ஸ்டோரி, ஷ்ரெக் என்று பட்டியல் நீளம்.

ஆனால் இந்த அ கட் இன் பரிஸ் எனும் கார்ட்டூன் திரைப்படம் வித்தியாசமானது. சிறுவயதில் இரசிய மொழிபெயர்ப்பு சிறுவர் புத்தகங்கள் படித்திருகின்றீர்களா? உ+ம் நெருப்புப் பறவை போன்றவை?? இந்த பிரஞ்சுக் கார்ட்டூனில் வரும் சித்திர அமைப்பு ஏனோ அதையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

ஒரு தொழில்முறை திருடன் அவனுடன் ஒரு பூனை அவன் செல்லும் இடம் எல்லாம் செல்கின்றது. நகரின் மறுபக்கம் ஒரு பொலீஸ் அதிகாரியும் அவளின் மகளும். இந்தப் பெண் பொலீஸ் காரியையும் சிறுமியையும் வில்லனையும் திருடனையும் ஒரு கோட்டில் இணைப்தற்கு இந்தப் பூனை பயன்படுகின்றது.

வித்தியாசமான சித்திரங்களையும் அதனோடு ஒட்டிச் செல்லும் கதையும் மனதை வருடிச் செல்கின்றது.

இந்த கிருஸ்மஸ் விடுமுறைக்கு குடும்பமாக இருந்த டிவிடியில் போட்டுப் பார்க்க ஒரு நல்ல திரைப்படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கார்ட்டூன் திரைப்படம்.

புள்ளி 80/100

posted by மயூரேசன் in அனிமேசன் திரைப்படம்,சினிமா,திரைவிமர்சனம் and have Comments (2)

The Walking Dead

அண்மையில் AMC தொலைக்காட்சியில் த வோல்க்கிங் டெட் என்கிற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஏற்கனவே பாகம் ஒன்று முடிவடைந்து பாகம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது. நண்பன் தயவில் பாகம் ஒன்று டிவிடி கையில கிடைக்கவே ஆறு எபிசொட்டுகளையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன்.

Walking Dead Poster

சாதாரண சொம்பி (Zombie) கதைகளில் இருந்து வித்தியாசமாகவும் கொஞ்சம் கிலி ஊட்டுவதாகவும் இருந்தது. அதன் பின்னர் கட்டாயம் இரண்டாம் பாகத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணி அமெரிக்காவில் ஒலிபரப்பாகி சில மணி நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவிறக்கிப் பார்க்கத் தொடங்கினேன்.

த வோக்கிங் டெட் கதை ஒரு பொலீஸ் காரனைச் சுற்றி நடக்கின்றது. ஒரு சிறய நகரத்தில் பொலீஸ் செரீப்பாக வேலை செய்கின்றார் ரிக். ஒரு நாள் சட்டத்தை மீறும் நபர்களை மடக்கும் நிகழ்வில் காயப்பட்டு உயிர் நண்பன் சோன் இனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார். சில நாள் கழித்து விழித்துப் பார்க்கும் ரிக்கிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவர் காயப்படும் போது இருந்த உலகமும் இப்போது இருக்கும் உலகமும் இரண்டு துருவங்களாக இருந்தன. வைத்திய சாலை எல்லாம் அடித்து நொருக்கப்பட்டு சொம்பிகள் அலைந்து திரிகின்றன. அவற்றில் இருந்து தப்பி தனது குடும்பத்தைத் தேடி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றார். இதற்கு மேல் கதையை சொல்ல விருப்பமில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். ;)

வோல்க்கிங் டெட் அரிப்பு அதிகரிக்கத் தொடங்கவே அது பற்றி ஆராயத் தொடங்கியதில் இன்னுமொரு இனிப்பான செய்தி கிடைத்தது. அதாவது வோக்கிங் டெட் என்பது ஒரு கிராபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கின்றார்கள். இதற்கும் மேலும் தாங்குமா இந்த உயிர். உடனே இணைய வழி காமிக்சுகளை இறக்கியாச்சு. பாகம் பாகமாக வாசிக்கத் தொடங்கினால் அடேங்கப்பா, தொலைக்காட்சித் தொடரை விட மிகவும் அருமை. புத்தகத்திற்கு புத்தகம் அலுப்பத் தட்டாமல் வாசிக்க வேண்டும் என்று வெறி அதிகமாகி எனது அன்ரொயிட் தொலைபேசி, டாப்லெட் என்று அனைத்திலும் நிரப்பி பயன நேரங்களில் கூட வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்.

தொலைக்காட்சிக் கதைக்கும், காமிக்ஸ் புத்தகத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தாலும் பல இடங்களில் புத்தகம் நிமிர்ந்து நிற்கின்றது. காமிக்சையும் தொலைக்காட்சித் தொடரையும் ஒப்பிடுவது தப்புத்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் காமிக்ஸ் உயர்ந்து நிற்கின்றது. தொலைக்காட்சியில் காட்ட முடியாத பல கோணங்களில் அபூர்வமாகச் சித்திரம் தீட்டியுள்ளார்கள். தொலைக்காட்சித் தொடரில் வரும் பொலீஸ் அதிகாரியை விட காமிக்சில் வரும் ரிக்கை மிகவும் பிடித்து விட்டது. :)

தொலைக்காட்சி Vs காமிக்ஸ்

நீங்கள் காமிக்ஸ் பிரியரானால் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகத் தொடர். உங்களுக்காக புத்தக அட்டைகள் சில இங்கே.

தொலைக்காட்சித் தொடர் 85/100
காமிக்ஸ் புத்தகம் 90/100

பி.கு: இவற்றை எல்லாம் 7ம் அறிவு எடுத்து எங்கள் 6ம் அறிவையும் கேள்விக்குறியாக்குபவர்கட்கு போட்டுக் காட்டவேண்டும். ;)
 

posted by மயூரேசன் in காமிக்ஸ்,தொலைக்காட்சி and have Comments (3)

Kung Fu Panda 2: விமர்சனம்

2008 வெளி வந்த குங்பு பண்டா திரைப்படத்தை வெறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் அது. எந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் அதைத் தொடர்ந்து இன்னுமொரு திரைப்படம் எடுப்பது ஹாலிவூட் வழமை. அவ்வகையில் இந்த குங்பு பண்டா 2 வெளிவந்திருக்கின்றது. குங்கு பண்டா கதை என்னவெனில் ஒரு நூடில் கடையில் பிறந்து (அப்படித்தான் முதல் நினைத்தோம் ஆனால் தத்தெடுக்கப்பட்டது) வளர்ந்த ஒரு பண்டா பெரிய குங்பு சண்டைக்காரனாக வர விரும்புகின்றது.  அதன் ஆசையும் முதலாம் பாகம் நிறைவில் முற்றும் பெறுகின்றது. அதாவது சீரோ டு ஹூரோ கதை ;)

இரண்டாம் பாகத்தில் புதியதாக ஒரு கதை முளைத்து விடுகின்றது. பண்டாவின் குடும்பம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஏதோ நடந்ததாகவும் அதற்கு ஒரு வெள்ளை மயிலே காரணம் என்றும் மெல்ல மெல்ல தெரியவருகின்றது. பண்டா தன் பூர்வீகத்தை அறிந்து கொண்டதா மயிலிற்கு என்ன ஆனது போன்ற விடையங்களுடன் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அனிமேசன் திரைப்படங்களின் கதையமைப்பும் காட்சியமைப்புகளும் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே வருகின்றது. நிறம் மொழி மதம் அவை எல்லாவற்றையும் விட வயது போன்றவற்றைக் கடந்து எங்களை இரசிக்க வைக்கின்றது.

Jennifer Yuh நிச்சயமாக கடும் முயற்சியையும் உழைப்பையும் இந்த திரைப்படத்தில் சிந்தி இருக்கின்றார். காட்சிக்கு காட்சி வரும் பண்டாவின் சேஷ்டைகளும், வார்த்தைக்கு வார்த்தை வரும் பகிடிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றது.

திரைப்படத்தின் முடிவு ஒரே கூத்தாக இருக்கும். பூவின் (அதான் பண்டாவின் பெயர் பூ) உள்மன அமைதியும் அதைத்தொடர்ந்த விளைவுகளும் துறைமுகத்தில் எதிரி யுத்தக்கப்பல்கள் முன்னாடி.. அட்ரா சக்கை அட்ரா சக்கை.. அதை நீங்களே பார்த்துக் கொள்ளவும்.

குடும்பத்துடன் சென்று இரசிக்க நிச்சயமாகத் தரமான ஒரு திரைப்படம். கட்டாயமாகத் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மூன்றாம் பாகத்தின் தொடக்கப் புள்ளியை இரண்டாம் பாகத்தின் முடிவில் காட்டிவிட்டார்கள்.

 

posted by மயூரேசன் in அனிமேசன் திரைப்படம்,திரைவிமர்சனம் and have Comments (2)
Tags:

ஹரி போட்டர் அன் த டெத்லி ஹலோவ்ஸ் – பாகம் 1

ஹரி போட்டர் என்றாலே நான் கொஞ்சம் உசாரடைந்து விடுவது வழமை. புத்தகங்களை தலைகீழாக நின்று வாசித்த காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன். ஏழாம் புத்தகம் வெளியானபோது புத்தகம் வாங்க கையில் பணமில்லாமல் ஈபுக்கில் படித்து அப்புறம் விலை குறைந்த பின்னர் அதை வாங்கி என்னுடைய புத்தக கிடங்கில் சேமித்துக் கொண்டதை நினைத்துப் பார்க்கின்றேன்.

ஹரி போட்டர் திரைப்படங்களை எடுத்து நோக்கினால் முதலாம் பாகம் சூப்பர், இரண்டாம் பாகம் சூப்பர், மூன்றாம் பாகம் சூப்பர், நான்காம் பாகம் பரவாயில்லை, ஐந்தாப் பாகம் மொக்கை, ஆறாம் பாகம் செம மொக்கை இப்போது ஏழாம் பாகத்தின் முதல் பாதி செம மொக்கை மற்றும் அறுவை.

ஏழாம் பாகத்தை இரண்டு பாகமாக உடைத்து திரைப்படம் ஆக்குகின்றார்கள் என்று கேள்விப்பட்ட போது மிகவும் சந்தோஷமடைந்தேன். காரணம் புத்தகத்தில் வருவதை அப்படியே திரைப்படத்தில் காட்ட முடியாது. பல சம்பவங்களை கத்தரித்து விடுவார்கள். இவ்வாறு இரண்டு பாகமாக திரைப்படம் ஆக்கினால் பல சம்பவங்களை நிச்சயமாக உள்ளடக்கலாம்.

<hr>

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் அண்ணா தயவில் திரைப்படத்திற்குப் போனோம். ஏற்கனவே டெக்கான் குரோனிகல்ஸில் விமர்சனம் படித்த அண்ணா இந்த திரைப்படம் சிறுவர்களுக்குப் பெருத்தமில்லாத பல காட்சிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். நாங்கதான் பெரியவங்க ஆச்சே, பார்த்துட்டாப் போச்சு என்று புறப்பட்டாகிவிட்டது.

திரைப்படம் PG 13 என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் பல சிறுசுகள் திரையரங்கு எங்கும் ஓடித் திரிந்தன. கொரிக்க பண்டங்களை வாங்கி உள்ளே நுழைந்தோம். கடைசில் திரைப்படமும் ஆரம்பமாகியது.

புத்தகம் கிடைத்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்புடன் திரைப்படத்தை பார்த்தால் ஒரே அறுவை. ரொம்பவும் நொந்து போயிட்டோம். புத்தகத்தில் நடக்கும் மயிர்கூச்செறியும் மந்திரச் சண்டையெல்லாம் உப்புச் சப்பில்லாமல் இருந்தது.

நமக்குப் பிடித்த பாத்திரம் மடியும் போது மிகவும் மனம் உடைந்துவிடுவது வழமை அல்லவா. புத்தகம் வாசிக்குப் போது நான் அழுது இருக்கின்றேன். நம்பினால் நம்புங்கள் திரைப்படத்தில் அப்படி ஒரு உணர்வுமே இல்லை. எல்லாம் வெறுமையாக இருக்கின்றது.

முன்னைய பாகங்களில் கலக்கிய ஹரி இப்பாகத்தில் ரொம்பவும் சுமாராகவே நடிக்கின்றார். ரொன் அதைவிடக் கேவலம். ஹார்மானி.. அப்பா.. அவர் இப்போது ஹர்மானியாக நடிப்பதை விட ஒரு நாயகியாக நடிப்பதற்குத் தயாராகி விட்டதாகத் தெரிகின்றது. ரொம்பவுமே ஒல்லியாக அசிங்கமாக இருக்கின்றார். எனக் கென்றால் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் மூர்க்கத்தனமாக எம்மா வாட்சன் பின்னால் எப்படிச் சுத்தினேன் என்று ஓவியனிடமும், அன்பு இரசிகனிடமும் கேட்டால் சொல்வார்கள். அந்தப் பெட்டை இப்ப இல்லை.

திரைப்படத்தில் வரும் காட்சிகள் நிச்சயமாகச் சிறுவர்களுக்கு ஏற்ற திரைப்படம் அல்ல என்று சொல்லுகின்றது. குறிப்பாக சில வன்முறை நிறைந்த காட்சிகள். அதைவிட அரை நிர்வாணக் காட்சிகளும் வந்து சேர்ந்துவிடுகின்றது.

காட்சி அமைப்புகள், ஒளியமைப்புகள் பிரமாதம். அவற்றைக் குறைசொல்வதற்கில்லை. நிலவறை போன்ற காட்சிகள் அபாரமாக உள்ளது. ஆனால் யாருக்கு தங்கத் தட்டில் வைத்த தவளைக் கறி பிடிக்கும்???

எதற்காகவோ தெரியவில்லை ஹரி போட்டர் என்ற பெயரிற்காக இருக்கலாம், உலகம் எங்கும் திரைப்படம் நன்றாகவே ஓடுகின்றது. முதல் வாரத்தில் உலகம் எங்கும் $US205 million பணத்தை வாரியுள்ளது திரைப்படம். ஜமாக்சில் பார்த்த முதல் மொக்கைத் திரைப்படம் இதுதான்.

இப்படியான ஒரு அருமையான புத்தகத்தை இப்படியா சீரழிக்க வேண்டும். நீங்கள் ஹரி புத்தக இரசிகரானால் தயவு செய்து இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம்.

விரிவான விமர்சனம் எழுதவும் ஏதோ பிடிக்கவில்லை.

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம்,ஹரி போட்டர் and have Comments (3)
Tags:

Robin Hood (2010) விமர்சனம்

ஏழைகளிடம் திருடி பணக்காரனிடம் கொடுப்பவன் துரோகி. பணக்கானிடம் இருந்து திருடி ஏழைகளிடம் கொடுத்தால் அவன் ஹீரோ. இவ்வகையான ஹீரோக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஏழைகளின் தோழன் ரொபின் ஹூட். ரொபின் ஹூட் நொட்டிங்காம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கே மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி புரிந்த செரீபை எதிர்த்து மக்களுகுச் சேவை செய்ததாக வரலாறு.

இவ்வகையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவந்துள்ளன. என் உள்ளத்தை என்றும் விட்டு நகராத ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடர் 80களில் வெளியானது பின்னர் இலங்கை ரூபவாகினியில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 90 களில் ஒளிபரப்பானது.

இலங்கையில் உள்ள எந்த வொரு குழந்தையும் அக்கால கட்டத்தில் இந்த ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ரொபின் கூட்டினால் உந்தப்பட்டு மரத்தில் வாள் தீட்டியதையும் ஈர்க்கில் எடுத்து அதில் அம்பும் வில்லும் செய்து குருவியை சரி குறிவைத்து அடிக்க முயன்றதும் மறக்க முடியாத காலங்கள். இதைப் பற்றி சில இலங்கைப் பதிவர்கள் கூட பதிவிட்டிருந்தார்கள்.

இந்த ரொபின் கூட் தொலைக் காட்சித் தொடரில் நடித்த பலரும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஹீரோ வாக இரண்டு ரொபின்கள் வருவார்கள். முதல் பாகத்தில் வரும் ரொபின் கொலை செய்யப்பட்ட பின்னர் ரோபேர்ட் எனும் ஒரு பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் வருவார். அவர் மீளவும் ரொபினின் கூட்டத்தை ஒன்றிணைப்பார்.

80 களின் வெளியான தொலைக்காட்சி ரொபின்

திரைப்பட விமர்சனம் என்று ஆரம்பித்து தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் அல்லவா செய்கின்றேன். ;)


நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

இங்கனம் ரொபின் கூட்டின் தோற்றம் வரலாறு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கதைகள் உலாவுகின்றன. சிலர் ரொபின் கூட் என்று ஒரு நபர் இருந்ததே இல்லை என்கின்றார்கள் ஆனால் நிச்சயமாக இருந்தார் என்று இன்னுமொரு கூட்டம் அடித்துச் சொல்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த திரைப்படம் ரொபின் கூட்டின் வரலாறு பற்றிப் புதுக் கதை கூறுகின்றது. பேசாமல் இந்த திரைப்படத்திற்கு Origin of Robin Hood என்றோ Rise of Robin Hood என்றோ வைத்திருக்கலாம். பலரும் ரொபின் கூட் துரோகியாக அக்சன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கும் போது ரொபின் எப்படித் தோன்றினார் என்று மட்டுமே இங்கே காட்டப்படுகின்றது. இதனால் தான் என்னவோ பல இரசிக உள்ளங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

இரண்டாம் சிலுவை யுத்தம் நடத்த புனித பூமி சென்று திரும்பும் வழியில் நடக்கும் யுத்தம் ஒன்றில் இங்கிலாந்தின் மிகப் பெரிய மன்னன் சிங்க மனசுக் காரன் ரிச்சார்ட் (Richard the Lion Heart) பலியாகி விடுகின்றான். ரிச்சாட்டின் படையில் வில்வித்தையில் தேர்ந்த போர் வீரனாகப் பணியாற்றுகின்றான் ரொபின்.

அரசனின் மரணத்தின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளினால் அரசனின் முடி மற்றும் லொக்ஸ்லி பிரபுவின் மகனின் உடைவாள் என்பன ரொபின் கைகளில் மாட்டி விடுகின்றது. இதை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட சங்கர்ப்பம் பூண்டு புறப்படும் ரொபின் இங்கிலாந்தின் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இங்கிலாந்தின் துரோகி கொட்பிரேயையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

இறுதி யுத்தத்தில் ரொபின்

இறுதி யுத்தத்தில் ரொபின்

கதையை முழுமையாகச் சொல்லாமல் சொதப்பலா சொல்லியிருக்கன் அப்போதுதான் நீங்கள் திரையிலோ டிவிடியிலோ பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படம் மேல் பெரும் ஆர்வர் மேலிட இன்னுமொரு காரணமும் இருந்தது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களைக் குவித்த அதே இயக்குனர் அதே நாயகன் றசல் குரோவை வைத்து இயக்கிய திரைப்படம். ஆதலினால் திரைப்படம் பற்றிக் கடும் எதிர் பார்ப்பு மக்களிடம். கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லியின் பிரமாண்டத்தை இங்கேயும் காணலாம் குறிப்பாக பிரஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் எதிர்கொள்ளும் காட்சி.

அமெரிக்க திரைப்பட வரிசையில் கிடு கிடு என கீழே இறங்கி விட்டாலும் பிரித்தானியாவில் தர வரிசையில் மேலே சில காலம் நின்றது. அவர்கள் ஊர் லெஜண்ட் பற்றிய கதை என்பதால் என்னவோ அவர்கள் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.

தானைத் தலைவன் ரசல் குரோவிற்கு இப்போது வயது 45ஆம். இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்கின்றார்களாம். அப்படியானால் 65 வயதில் அவருக்கு ஐஸ்ஸூ தேவையா?? ஹி..ஹி.. :) ரொபின் பாத்திரத்தில் இது வரை நடித்தவர்களில் ரசல் குரோவிற்குத்தான் வயது கூடவாம்.

இதே வேளை பட்மான், டேர்மினேட்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரிஸ்டியன் பேலையும் ரொபின் கூட் பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள் என்று கூறப்படுகின்றது. அம்மா மகமாயி எங்கள காப்பாத்திட்டே… நன்றி. பேல் கிட்ட டர்மினேட்டரிலயே அறுபட்டது போதும். :)

என்னைப் பொறுத்தவரையில் அருமையான திரைப்படம். இரசிக உள்ளங்கள் இரசிக்கலாம்.

MY RATING: 75/100
IMDB RATING: 70/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (12)

Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் ;)

My Rating: 65/100

IMDB Rating: 67/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (7)

மரண மாளிகை – ரிப்போட்டர் ஜானி

புத்தக அட்டை

அண்மையில் சில காமிக்ஸ் புத்தகங்களை கையகப்படுத்தியிருந்தேன். அவற்றை ஒன்று ஒன்றாக வாசித்து இங்கே குறும் பதிவுகளாக இடும் உத்தேசம். அவ்வகையில் இன்று வாசித்துப் பதிவு இடப் போகும் புத்தகம் ரிப்போட்டர் ஜானி தோன்றும் மரண மாளிகை.

நாம் பல ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு சொல்லப்போனால் ஜோடி நம்பர் வன், சுப்பர் சிங்கர் என்று பல. அதே போல வெளி நாடுகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம். அண்மையில் நம் ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார் ஞாபகமா?? அது கூட ஒரு ரியாலிட்டி ஷோவேதான். எங்கள் கதையும் இப்படியான ஒரு ரியாலிட்டி ஷோவை சுற்றியே நடக்கின்றது.

பெந்தோசு மாளிகையில் ஒரு ரியாலிட்டி ஷோ அங்கே அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள். இதைத் துப்பறிய எங்கள் ரிப்போட்டர் ஜானி களம் இறங்குகின்றார். மெல்ல மெல்லமாக முடிச்சுகளை அவிழ்கின்றார். இறுதியில் எதிர் பாரா ஒரு வில்லன் வந்து அமைந்து விடுகின்றான்.

கதை வேகம் என்னவோ மிகவும் மந்தம்தான்.  நான் ரிப்போட்டர் ஜானியின் கதைகளுக்கு பெரிய விசிரியாக இருந்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் போது வாசித்துவிடுவேன். ரிப்போட்டர் ஜானி மார்ச் 3, 1955 இல் பிறப்பெடுத்திருகின்றார். ரின் ரின் எனும் காமிக்ஸ் புத்தகத்தில் இவர் வந்திருகின்றார் முதன் முதலாக. தமிழில் ரிப்போட்டர் ஜானி என்று அறியப்பட்டாலும் தலை ஆங்கிலத்தில் Ric Hochet என்றே அறியப்படுகின்றது.

இப்படியான காமிக்ஸூகளை ஆங்கிலத்தில் கூடத் தேடிப் பிடிப்பது கடினம். எங்கள் பாக்கியம் லயன் முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் தமிழில் வெளியிடுகின்றமை.

posted by மயூரேசன் in காமிக்ஸ் and have Comments (6)

டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்

டெக்ஸ் வில்லரின் சாகசங்களை வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனிதான். அவ்வகையின் அண்மையில் டெக்சின் ஒரு சாகசத்தை வாசிக்க கிடைத்தது. வருந்தத்தக்க விடையம் என்னவெனில் இந்தப் புத்தகம் மொத்தம் மூன்று பாகங்களாக வந்துள்ளது. அடியேன் கையின் சிக்கியதோ இந்த முதற் பாகம் மட்டுமே.

இந்தக் கதையின் சிறப்பு என்னவெனில் டெக்சின் வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதே. டெக்சின் செவ்விந்திய மனைவி, மகன் என்று கதை நீள்கின்றது.

இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு என்று தொடர்ந்திருக்கின்றன. கடைகளில் தேடியும் இன்னமும் இந்தப் பாகங்கள் கிடைக்கவில்லை.

நீண்ட நாளாக காமிக்ஸ் பதிவு இடாத காரணத்தால் இந்த சிறிய காமிக்ஸ் பதிவு ;)

கொசுறுத் தகவல்: நம் பலரும் விரும்பி வாசிக்கும் லயன் ஆசிரியர் திரு. விஜயனின் “சிங்கத்தின் சிறுவயதில்” தொடரும் இந்த இதழில்தான் ஆரம்பமாகின்றது.

posted by மயூரேசன் in காமிக்ஸ் and have Comments (3)

The Twilight Saga: Eclipse விமர்சனம்

ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று ஒரே வியப்பாக இருக்கலாம்.

கதைச் சுருக்கம் என்னவென்றால் பல ஹொலிவூட் திரைப்படங்களிலும் வந்து பயமுறுத்தும் ட்ரகுலா (இரத்தக் காட்டேரி) பற்றிய கதையே இது.  இரத்தக் காட்டேரி வந்தால் அவர்களை எதிர்க்க வெயாவூல்ப் எனும் ஒநாய்களும் இருந்தேயாகும்.  இக்கதையிலும் அதற்கு குறைவில்லை. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக மனிதப் பெண்ணுடன் ஒரு வம்பயர் காதலில் வீழ்கின்றது. அந்தப் பெண்ணும் காதலில் வீழ்கின்றாள். இதற்கிடையில் சாதாரணக் காதல் முக்கோணக் காதலாகின்றது ஒரு வெயாவூல்பின் அறிமுகத்தால்.  வம்பயர் காதலிக்கும் பெண்ணை இந்த வம்பயர்களை காலம் காலமாக வெறுக்கும் வெயார்வூல்பும் காதலிக்கின்றது. இவர்கள் மூன்றுபேரையும் சுற்றியே 4 புத்தகங்களும் 3 திரைப்படங்களும் (கடைசி திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை) நகர்கின்றது.


Vampires இருந்தால் திரைப்படத்தில் காதலிற்கு குறைவேயிருக்காது. வம்பயர்கள் கடும் காதல் மன்னர்கள். இந்த திரைப்படத்தில் வரும் Edward அமைதியான வம்பயர். அதாவது மனிதர்களைக் கொலை செய்யாமல் மிருகங்களைக் கொண்டு இரத்தம் அருந்தி பிழைக்கும் ஒருவர். அவருடன் அவரைப்போலவே பழக்கமுடைய ஒரு குடும்பத்தார்.

மறு பக்கத்தில் காலம் காலமாக Fork நகரில் வாழ்ந்து வரும் செவ்விந்திய வழித்தோன்றல்கள். இவர்கள் குடும்பத்தில்தான் அடுத்த நாயகன் Jacop Black பிறக்கின்றார். இவர்தான் அந்த Werewolf குடும்பத்தில் பிறந்த ஒரு பையன்.

Bella மற்றும் Edward

அப்புறம் பெல்லா எனும் பெண் இந்த போர்க் நகருக்கு வருகின்றாள்.  ஒரே நகரில் வசிக்கும் Vampire, Werewolf இந்தப் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்.

இதேவேளையில் Bella வைக் கொலை செய்ய முயலும் ஒரு கெட்ட வம்பயரைக் கொலை செய்துவிட அதனால் கோவப்படும் விக்டோரியா எனும் காதலி வம்பயர் பெல்லாவைக் கொல்ல அலைகின்றது. பாகம் இரண்டிலிருந்து விக்டோரியாவிடம் இருந்து பெல்லாவைக் காப்பாற்றும் பொறுப்பு எட்வார்ட் மற்றும் யேகோப்பிடம்.

இந்த மூன்றாம் பாகத்தில் இந்த விக்டோரியா பிரைச்சனை என்ன ஆனது. இவர்களைப் பழிவாங்க விக்டோரியா என்ன செய்தார் என்பதே கதை. இதற்கு மேலும் கதையைச் சொல்ல விருப்பமில்லை.

முதலம் பாகத்தை பலரும் விரும்பிய போதும் இரண்டாம் பாகத்தை பலரும் பெரிதாகப் போற்றிப் பாராட்டவில்லை. என்னைப் பொறுத்தவரையில் முதலாம் பாகமே சிறப்பாக எடுத்திருக்கின்றனர் அதற்கு அடுத்ததாக மூன்றாம் பாகமான எக்கிளிப்ஸ் சிறப்பாக உள்ளது.

திரைக் காட்சியமைப்புகள் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக வம்பயர், வேர்வூல்ப் சண்டைக் காட்சிகள் அபாரம். இயல்பாகவே பன்டசி கதைகளில் நாட்டம் உள்ளோர் கட்டாயம் இந்த திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பர்.

MY RATING: 75/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (6)